1861செம்பொன் நீள் முடி எங்கள் இராவணன்
      சீதை என்பது ஓர் தெய்வம் கொணர்ந்து
வம்பு உலாம் கடி காவில் சிறையா
      வைத்ததே குற்றம் ஆயிற்றுக் காணீர்
கும்பனோடு நிகும்பனும் பட்டான்
      கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது
      அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ             (5)