1862ஓத மா கடலைக் கடந்து ஏறி
      உயர்கொள் மாக் கடி காவை இறுத்து
காதல் மக்களும் சுற்றமும் கொன்று
      கடி இலங்கை மலங்க எரித்து
தூது வந்த குரங்குக்கே உங்கள்
      தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே
ஆதர் நின்று படுகின்றது அந்தோ
      அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ            (6)