1864மனம் கொண்டு ஏறும் மண்டோதரி முதலா
      அம் கயல் கண்ணினார்கள் இருப்ப
தனம்கொள் மென் முலை நோக்கம் ஒழிந்து
      தஞ்சமே சில தாபதர் என்று
புனம்கொள் மென் மயிலைச் சிறைவைத்த
      புன்மையாளன் நெஞ்சில் புக எய்த
அனங்கன் அன்ன திண் தோள் எம் இராமற்கு
      அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ            (8)