1865புரங்கள் மூன்றும் ஓர் மாத்திரைப் போதில்
      பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பின்
சரங்களே கொடிது ஆய் அடுகின்ற
      சாம்பவான் உடன் நிறகத் தொழுதோம்
இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே
      இலங்கு வெம் கதிரோன்-தன் சிறுவா
குரங்குகட்கு அரசே எம்மைக் கொல்லேல்
      கூறினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (9)