| 1866 | அங்கு அவ் வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை அழித்தவன்-தன்னை பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இவ் உலகினில் எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர் இம்மையே இடர் இல்லை இறந்தால் தங்கும் ஊர் அண்டமே கண்டு கொள்மின் சாற்றினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (10) |
|