187குடங்கள் எடுத்து ஏற விட்டுக்
      கூத்தாட வல்ல எம் கோவே
மடம் கொள் மதிமுகத்தாரை
      மால்செய வல்ல என் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை
      இரு பிளவு ஆக முன் கீண்டாய்
குடந்தைக் கிடந்த எம் கோவே
      குருக்கத்திப் பூச் சூட்ட வாராய்             (7)