1872கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து இலங்கை
அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்க்களத்து
வெல்லகில்லாது அஞ்சினோம்காண் வெம் கதிரோன் சிறுவா
கொல்லவேண்டா ஆடுகின்றோம்-குழமணிதூரமே             (6)