189அண்டத்து அமரர்கள் சூழ
      அத்தாணியுள் அங்கு இருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்
      தூமலராள் மணவாளா
உண்டிட்டு உலகினை ஏழும்
      ஓர் ஆலிலையிற் துயில் கொண்டாய்
கண்டு நான் உன்னை உகக்கக்
      கருமுகைப் பூச் சூட்ட வாராய்             (9)