முகப்பு
தொடக்கம்
189
அண்டத்து அமரர்கள் சூழ
அத்தாணியுள் அங்கு இருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்
தூமலராள் மணவாளா
உண்டிட்டு உலகினை ஏழும்
ஓர் ஆலிலையிற் துயில் கொண்டாய்
கண்டு நான் உன்னை உகக்கக்
கருமுகைப் பூச் சூட்ட வாராய் (9)