1899உளைந்திட்டு எழுந்த மது-கைடவர்கள்
      உலப்பு இல் வலியார்-அவர்பால் வயிரம்
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ
      அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள்
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று
      மலை போல் அவுணன் உடல் வள் உகிரால்
அளைந்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
      அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே            (3)