1901நீண்டான் குறள் ஆய் நெடு வான் அளவும்
      அடியார் படும் ஆழ் துயர் ஆய எல்லாம்
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும்
      செல வைத்த பிரான் அது அன்றியும் முன்
வேண்டாமை நமன்-தமர் என் தமரை
      வினவப் பெறுவார் அலர் என்று உலகு ஏழ்
ஆண்டான்-அவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
      அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே             (5)