1903 | படைத்திட்டு அது இவ் வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் துடைத்திட்டு அவரைத் தனக்கு ஆக்க என்னத் தெளியா அரக்கர் திறல் போய் அவிய மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப் பாய்ச்சி விம்ம கடலை அடைத்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (7) |
|