1904நெறித்திட்ட மென் கூழை நல் நேர்-இழையோடு
      உடன் ஆய வில் என்ன வல் ஏய் அதனை
இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு
      இளங் கொற்றவன் ஆய் துளங்காத முந்நீர்
செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன்
      செழு நீள் முடி தோளொடு தாள் துணிய
அறுத்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
      அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே            (8)