1905சுரிந்திட்ட செங் கேழ் உளைப் பொங்கு அரிமா
      தொலைய பிரியாது சென்று எய்தி எய்தாது
இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காததன் வாய்
      இரு கூறு செய்த பெருமான் முன நாள்
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து
      மலைபோல் உருவத்து ஓர் இராக்கதி மூக்கு
அரிந்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
      அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே            (9)