1906நின்றார் முகப்புச் சிறிதும் நினையான்
      வயிற்றை நிறைப்பான் உறிப் பால் தயிர் நெய்
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு
      ஆப்புண்டிருந்த பெருமான் அடிமேல்
நன்று ஆய தொல் சீர் வயல் மங்கையர்-கோன்
      கலியன் ஒலிசெய்த தமிழ்-மாலை வல்லார்
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி
      இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே            (10)