1911தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன்
      தோழிமார் ஆரும் இல்லை
சந்த மலர்க் குழலாள் தனியே
      விளையாடும் இடம் குறுகி
பந்து பறித்து துகில் பற்றிக் கீறி
      படிறன் படிறுசெய்யும்
நந்தன் மதலைக்கு இங்கு என் கடவோம்? நங்காய்
      என் செய்கேன்? என் செய்கேனோ? (5)