1913ஆயிரம் கண் உடை இந்திரனாருக்கு
      அன்று ஆயர் விழவு எடுப்ப
பாசனம் நல்லன பண்டிகளால் புகப்
      பெய்த அதனை எல்லாம்
போயிருந்து அங்கு ஒரு பூத வடிவுகொண்டு
      உன் மகன் இன்று நங்காய்
மாயன் அதனை எல்லாம் முற்ற வாரி
      வளைத்து உண்டு இருந்தான் போலும்            (7)