முகப்பு
தொடக்கம்
1915
ஈடும் வலியும் உடைய இந் நம்பி
பிறந்த எழு திங்களில்
ஏடு அலர் கண்ணியினானை வளர்த்தி
யமுனை நீராடப் போனேன்
சேடன் திரு மறு மார்வன் கிடந்து
திருவடியால் மலைபோல்
ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை
உரப்புவது அஞ்சுவனே (9)