1915ஈடும் வலியும் உடைய இந் நம்பி
      பிறந்த எழு திங்களில்
ஏடு அலர் கண்ணியினானை வளர்த்தி
      யமுனை நீராடப் போனேன்
சேடன் திரு மறு மார்வன் கிடந்து
      திருவடியால் மலைபோல்
ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை
      உரப்புவது அஞ்சுவனே            (9)