முகப்பு
தொடக்கம்
1917
அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ-
நம்பீ ஆயர் மட மக்களை?
பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள்
பின்னே சென்று ஒளித்திருந்து
அங்கு அவர் பூந் துகில் வாரிக்கொண்டிட்டு
அரவு ஏர் இடையார் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொள்மின் என்று
மரம் ஏறி இருந்தாய் போலும் (11)