1917அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ-
      நம்பீ ஆயர் மட மக்களை?
பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள்
      பின்னே சென்று ஒளித்திருந்து
அங்கு அவர் பூந் துகில் வாரிக்கொண்டிட்டு
      அரவு ஏர் இடையார் இரப்ப
        மங்கை நல்லீர் வந்து கொள்மின் என்று
      மரம் ஏறி இருந்தாய் போலும்             (11)