1919தம்பரம் அல்லன ஆண்மைகளைத்
      தனியே நின்று தாம் செய்வரோ?
எம் பெருமான் உன்னைப் பெற்ற வயிறு உடையேன்
      இனி யான் என் செய்கேன்?
அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல்
      அங்கு அனல் செங் கண் உடை
வம்பு அவிழ் கானத்து மால் விடையோடு
      பிணங்கி நீ வந்தாய் போலும்             (13)