1931புள் உரு ஆகி நள் இருள் வந்த
      பூதனை மாள இலங்கை
ஒள் எரி மண்டி உண்ணப் பணித்த
      ஊக்கம்-அதனை நினைந்தோ-
கள் அவிழ் கோதை காதலும் எங்கள்
      காரிகை மாதர் கருத்தும்
பிள்ளை-தன் கையில் கிண்ணமே ஒக்கப்
      பேசுவது? எந்தை பிரானே            (1)