முகப்பு
தொடக்கம்
1932
மன்றில் மலிந்து கூத்து உவந்து ஆடி
மால் விடை ஏழும் அடர்த்து ஆயர்
அன்று நடுங்க ஆ-நிரை காத்த
ஆண்மை கொலோ? அறியேன் நான்-
நின்ற பிரானே நீள் கடல் வண்ணா
நீ இவள்-தன்னை நின் கோயில்
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா
முன் கை வளை கவர்ந்தாயே (2)