1935செரு அழியாத மன்னர்கள் மாள
      தேர் வலம் கொண்டு அவர் செல்லும்
அரு வழி வானம் அதர்படக் கண்ட
      ஆண்மை கொலோ? அறியேன் நான்-
திருமொழி எங்கள் தே மலர்க் கோதை
      சீர்மையை நினைந்திலை அந்தோ
பெரு வழி நாவல் கனியினும் எளியள்
      இவள் எனப் பேசுகின்றாயே            (5)