1936அரக்கியர் ஆகம் புல் என வில்லால்
      அணி மதிள் இலங்கையார்-கோனைச்
செருக்கு அழித்து அமரர் பணிய முன் நின்ற
      சேவகமோ செய்தது இன்று?-
முருக்கு இதழ் வாய்ச்சி முன் கை வெண் சங்கம்
      கொண்டு முன்னே நின்று போகாய்
எருக்கு இலைக்கு ஆக எறி மழு ஓச்சல்
      என் செய்வது? எந்தை பிரானே             (6)