1938பொருந்தலன் ஆகம் புள் உவந்து ஏற
      வள் உகிரால் பிளந்து அன்று
பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த
      பெருமைகொலோ செய்தது இன்று?-
பெருந் தடங் கண்ணி சுரும்பு உறு கோதை
      பெருமையை நினைந்திலை பேசில்
கருங் கடல் வண்ணா கவுள் கொண்ட நீர் ஆம்
      இவள் எனக் கருதுகின்றாயே            (8)