1939நீர் அழல் வான் ஆய் நெடு நிலம் கால் ஆய்
      நின்ற நின் நீர்மையை நினைந்தோ-
சீர் கெழு கோதை என் அலது இலள் என்று
      அன்னது ஓர் தேற்றன்மை தானோ-
பார் கெழு பவ்வத்து ஆர் அமுது அனைய
      பாவையைப் பாவம் செய்தேனுக்கு
ஆர் அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம்
      ஆக நின் மனத்து வைத்தாயே?            (9)