1940வேட்டத்தைக் கருதாது அடி-இணை வணங்கி
      மெய்ம்மையே நின்று எம் பெருமானை
வாள் திறல் தானை மங்கையர் தலைவன்
      மான வேல் கலியன் வாய் ஒலிகள்
தோட்டு அலர் பைந்தார்ச் சுடர் முடியானைப்
      பழமொழியால் பணிந்து உரைத்த
பாட்டு இவை பாட பத்திமை பெருகிச்
      சித்தமும் திருவொடு மிகுமே            (10)