1982செரு மிகு வாள் எயிற்ற அரவு ஒன்று சுற்றி
      திசை மண்ணும் விண்ணும் உடனே
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப
      இமையோர்கள் நின்று கடைய
பரு வரை ஒன்று நின்று முதுகில் பரந்து
      சுழலக் கிடந்து துயிலும்
அரு வரை அன்ன தன்மை அடல் ஆமை ஆன
      திருமால் நமக்கு ஓர் அரணே 2