2031நிதியினை பவளத் தூணை
      நெறிமையால் நினைய வல்லார்
கதியினை கஞ்சன் மாளக்
      கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி
      வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட
      தொண்டனேன்-விடுகிலேனே             (1)