2032காற்றினை புனலை தீயை
      கடிமதிள் இலங்கை செற்ற
ஏற்றினை இமயம் ஏய
      எழில் மணித் திரளை இன்ப
ஆற்றினை அமுதம்-தன்னை
      அவுணன் ஆர் உயிரை உண்ட
கூற்றினை குணங்கொண்டு உள்ளம்
      கூறு-நீ கூறுமாறே             (2)