2034கேட்க யான் உற்றது உண்டு
      கேழல் ஆய் உலகம் கொண்ட
பூக் கெழு வண்ணனாரைப்
      போதரக் கனவில் கண்டு
வாக்கினால் கருமம்-தன்னால்
      மனத்தினால் சிரத்தை-தன்னால்
வேட்கை மீதூர வாங்கி
      விழுங்கினேற்கு இனியவாறே             (4)