2035இரும்பு அனன்று உண்ட நீர்போல்
      எம் பெருமானுக்கு என்-தன்
அரும் பெறல் அன்பு புக்கிட்டு
      அடிமைபூண்டு உய்ந்து போனேன்
வரும் புயல் வண்ணனாரை
      மருவி என் மனத்து வைத்து
கரும்பின் இன் சாறு போலப்
      பருகினேற்கு இனியவாறே             (5)