2039உள்ளமோ ஒன்றில் நில்லாது
      ஓசையில் எரி நின்று உண்ணும்
கொள்ளிமேல் எறும்புபோலக்
      குழையுமால் என்-தன் உள்ளம்
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம்
      தேவராய் உலகம் கொண்ட
ஒள்ளியீர் உம்மை அல்லால்
      எழுமையும் துணை இலோமே             (9)