2041தொண்டு எல்லாம் பரவி நின்னைத்
      தொழுது அடி பணியுமாறு
கண்டு தான் கவலை தீர்ப்பான்
      ஆவதே பணியாய் எந்தாய்
அண்டம் ஆய் எண் திசைக்கும்
      ஆதி ஆய் நீதி ஆன
பண்டம் ஆம் பரம சோதி
      நின்னையே பரவுவேனே             (11)