2044காவியை வென்ற கண்ணார்
      கலவியே கருதி நாளும்
பாவியேன் ஆக எண்ணி
      அதனுள்ளே பழுத்தொழிந்தேன்
தூவி சேர் அன்னம் மன்னும்
      சூழ் புனல் குடந்தையானைப்
பாவியேன் பாவியாது
      பாவியேன் ஆயினேனே             (14)