2046மாய மான் மாயச் செற்று
      மருது இற நடந்து வையம்
தாய் அமா பரவை பொங்கத்
      தட வரை திரித்து வானோர்க்கு
ஈயும் மால் எம்பிரானார்க்கு
      என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலைகொண்டு
      சூட்டுவன் தொண்டனேனே             (16)