205பாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப்
      பல்வளையாள் என்மகள் இருப்ப
மேலை அகத்தே நெருப்பு வேண்டிச்
      சென்று இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்கிராமம் உடைய நம்பி
      சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்
ஆலைக் கரும்பின் மொழி அனைய
      அசோதை நங்காய் உன்மகனைக் கூவாய்             (5)