2050வானவர்-தங்கள்-கோனும்
      மலர்மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும்
      சேவடிச் செங் கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன
      வண் தமிழ்-மாலை நாலைந்து
ஊனம்-அது இன்றி வல்லார்
      ஒளி விசும்பு ஆள்வர் தாமே             (20)