2053 | திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும் திரேதைக்கண் வளை உருவாய்த் திகழ்ந்தான் என்றும் பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் பெருமானைக் கரு நீல வண்ணன்-தன்னை ஒரு வடிவத்து ஓர் உரு என்று உணரல் ஆகாது ஊழிதோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால் கரு வடிவில் செங் கண்ண வண்ணன்-தன்னை- கட்டுரையே-யார் ஒருவர் காண்கிற்பாரே? (3) |
|