2065 | கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும் அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும் சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு மெல் விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே மென் கிளிபோல் மிக மிழற்றும் என் பேதையே (15) |
|