2067 | பொங்கு ஆர் மெல் இளங் கொங்கை பொன்னே பூப்ப பொரு கயல் கண் நீர் அரும்பப் போந்து நின்று செங் கால மடப் புறவம் பெடைக்குப் பேசும் சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து ஆங்கே தண்காலும் தண் குடந்தை நகரும் பாடித் தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை? என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே (17) |
|