2071 | மை வண்ண நறுங் குஞ்சிக் குழல் பின் தாழ மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட எய் வண்ண வெம் சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்-இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ் வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே (21) |
|