2072நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா
      நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி
      எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன்
      கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில்? என்றேற்கு
      இது அன்றோ எழில் ஆலி என்றார் தாமே             (22)