2078தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாளச்
      சென்று உலகம் மூன்றினையும் திரிந்து ஓர் தேரால்
மன் இலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த
      வரை உருவின் மா களிற்றை தோழீ என்-தன்
பொன் இலங்கு முலைக் குவட்டில் பூட்டிக்கொண்டு
      போகாமை வல்லேனாய்ப் புலவி எய்தி
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த
      எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே             (28)