2079 | அன்று ஆயர் குலமகளுக்கு அரையன்-தன்னை அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான்-தன்னை குன்றாத வலி அரக்கர் கோனை மாள கொடும் சிலைவாய்ச் சரம் துரந்து குலம் களைந்து வென்றானை குன்று எடுத்த தோளினானை விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை தண் குடந்தைக் கிடந்த மாலை நெடியானை-அடி நாயேன் நினைந்திட்டேனே (29) |
|