218மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று  
மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை
ஒரடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே
தாவடி இட்டானால் இன்று முற்றும்
      தரணி அளந்தானால் இன்று முற்றும்            (7)