முகப்பு
தொடக்கம்
222
தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு
தளர்நடைஇட்டு வருவான்
பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு ஒரு
புள்ளுவன் பொய்யே தவழும்
மின்நேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை
துஞ்ச வாய்வைத்த பிரானே
அன்னே உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
அஞ்சுவன் அம்மம் தரவே (1)