225மைஆர் கண் மட ஆய்ச்சியர் மக்களை
      மையன்மை செய்து அவர் பின்போய்
கொய் ஆர் பூந்துகில் பற்றித் தனி நின்று
      குற்றம் பல பல செய்தாய்
பொய்யா உன்னைப் புறம் பல பேசுவ
      புத்தகத்துக்கு உள கேட்டேன்
ஐயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
      அஞ்சுவன் அம்மம் தரவே             (4)