232காரார் மேனி நிறத்து எம்பிரானைக்
      கடிகமழ் பூங்குழல் ஆய்ச்சி
ஆரா இன்னமுது உண்ணத் தருவன் நான்
      அம்மம் தாரேன் என்ற மாற்றம்
பாரார் தொல்புகழான் புதுவை மன்னன்
      பட்டர்பிரான் சொன்ன பாடல்
ஏரார் இன்னிசை மாலைகள் வல்லார்
      இருடிகேசன் அடியாரே             (11)