241குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான்
உடையும் கடியன ஊன்று வெம் பரற்கள் உடைக்
கடிய வெங் கானிடைக் கால்- அடி நோவக் கன்றின் பின்
கொடியென் என்பிள்ளையைப் போக்கினேன்:எல்லே பாவமே (9)