243சீலைக் குதம்பை ஒருகாது ஒருகாது
      செந்நிற மேற் தோன்றிப்பூ
கோலப் பணைக் கச்சும் கூறை- உடையும்
      குளிர் முத்தின் கோடாலமும்
காலிப் பின்னே வருகின்ற கடல்வண்ணன்
      வேடத்தை வந்து காணீர்
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர்
      நானே மற்று ஆரும் இல்லை (1)